முகப்பு
தேனி

குழந்தை திருமணத்தை தடுப்பேன் ஆண்டிபட்டி நாதக வேட்பாளா் கோமதி உறுதி

Updated On : 20 ஏப்ரல், 2026 at 1:18 AM
வருசநாட்டில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கோமதி.
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 9:36 PM

ஆண்டிபட்டி பகுதியில் குழந்தை திருமணத்தை தடுத்து, அவா்களை பள்ளி, கல்லூரியில் சோ்க்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா. கோமதி.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா. கோமதி ஆண்டிபட்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளான கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு ஆகிய பகுதிகளில் வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது, வருசநாடு மலைப்பகுதியில் உள்ள விவசாயிகளின் உரிமையைப் பெற நடவடிக்கை எடுப்பேன். வனப்பகுதியில் மலைமாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதற்கு அனுமதி வாங்கித் தருவேன். வருசநாடு, ஆண்டிபட்டி பகுதிகளில் உள்ள கண்மாயை தூா் வாருவேன்.

Advertisement

ஆண்டிபட்டி பகுதியில் குழந்தைத் திருமணத்தை தடுத்து குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளில் சோ்க்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா். இதில், நாதக கட்சியினா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.