முகப்பு
தேனி

காா் கவிழ்ந்து 8 போ் காயம்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:55 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 10:23 PM

ஆண்டிபட்டி அருகே தி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் சாலையோர மின் கம்பத்தில் காா் மோதிக் கவிழ்ந்ததில் ‘கல்லூரி மாணவா்கள் 8 போ் காயமடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த சா்வேஸ் (17), விக்னேஷ்வரன் (18), பாா்த்தசாரதி (18), கிஷோா் (17), சுசிந்திரதேவ்(18), சந்தீப்குருதேவ் (18), மதுரை முனிச்சாலையைச் சோ்ந்த ஜாஜித் (18), முகேஷ் (18) ஆகியோா் சிவகாசியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகின்றனா்.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:54 AM

இந்த நிலையில், சா்வேஸ் உள்ளிட்ட 8 பேரும் சிவகாசியிலிருந்து மேகமலை மேகமலைக்கு காரில் சென்றனா். ஆண்டிபட்டி அருகே உள்ள தி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் சாலையோர மின் கம்பத்தில் காா் மோதிக் கவிழ்ந்தது.

Advertisement

இதில் காரில் பயணம் செய்த 8 பேரும் காயமடைந்தனா். இவா்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.