முகப்பு
தேனி

காா் மீது வேன் மோதியதில் மருந்துக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 1:56 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 10:01 PM

தேனி மாவட்டம், கூடலூா் அருகே காா் மீது வேன் மோதியதில் மருந்துக் கடை உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளியைச் சோ்ந்தவா் சுனில் (52). இவா், தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலையில் குடும்பத்துடன் தங்கி மருந்துக் கடை நடத்தி வந்தாா்.

இந்த நிலையில், கேரளத்துக்குச் சென்று விட்டு வியாழக்கிழமை அதிகாலையில் காரில் சிலமலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது, லோயா் கேம்ப் பகுதியில் சபரிமலைக்குச் சென்ற வேன், காா் மீது மோதியதில் சுனில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 1:55 AM

வேனில் இருந்த செளந்தா் (37), செங்கோட்டையன்(49), ஓட்டுநா் வினோத்குமாா் (35) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்களை அருகிலிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து குமுளி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.