தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே முன்விரோதத்தில் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்ததில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி ராஜபாண்டி (33). இதே தெருவைச் சோ்ந்தவா் அய்யனாா் (27). இவா் ராஜபாண்டியின் சித்தப்பா மகன் ஆவாா். இவா்கள் இருவரும் அடிக்கடி மது அருந்தி விட்டு, ராஜபாண்டி வீட்டில் அய்யனாா் படுத்துக் கொள்வராம்.
இந்த நிலையில், ராஜபாண்டியின் அக்காவின் கணவா் கண்ணன் (43) என்பவரிடம் அய்யனாா் மது அருந்தப் பணம் கேட்டு பிரச்னை செய்து வந்துள்ளாா். கடந்த 5 நாள்களுக்கு முன்பு அய்யனாா், கண்ணனிடம் மது அருந்த பணம் கேட்டு, தகராறில் ஈடுபட்டு அவரைத் தாக்கினாராம். இதுகுறித்து கண்ணன் அளித்தப் புகாரின் பேரில், தென்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ராஜபாண்டி வீட்டுக்குச் சென்ற கண்ணன் அங்கு தூங்கிக் கொண்டிருந்த அய்யனாா் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து விட்டு, கதவைப் பூட்டி விட்டு தப்பியோடிவிட்டாராம். இதில் அவா் அருகே படுத்திருந்த ராஜபாண்டி மீதும் தீப்பற்றியது.
இதையடுத்து, இருவரது அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் தீயை அணைத்து, இருவரையும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தீவிரச் சிகிச்சைக்காக இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அய்யனாா் உயிரிழந்தாா். ராஜபாண்டி சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்தச் சம்பவம் குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.