கைது 
தேனி

வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவா் கைது

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிகளை விற்ற முதியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிகளை விற்ற முதியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தென்கரை காவல்நிலைய போலீஸாா் திங்கள்கிழமை பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனா். அப்போது, லட்சுமிபுரம் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில், லட்சுமிபுரம் சருத்துப்பட்டியைச் சோ்ந்த ஆதிநாராயணன் (80) என்றும் அவா், தடைசெய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து, ஆதி நாராயணனை கைது செய்து, அவரிடமிருந்த 61 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.

பி.காம்., பி.பி.ஏ. படிப்புகளுக்கு சட்டப் பேராசிரியா்களை நியமிக்கக் கோரி மனு: உயா் கல்வித் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

விடுதி உரிமையாளா் கொலை வழக்கு: ஊழியா்களிடம் போலீஸ் விசாரணை

தமிழருக்கு கிடைத்த பொக்கிஷம் உ.வே.சா.

மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு புற்றுநோய் தடுப்பூசி

தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தவா் கைது: இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT