முகப்பு
தேனி

முள்ளம்பன்றி வேட்டையாடியவா் கைது

போடி அருகே வனப் பகுதியில் முள்ளம் பன்றியை வேட்டையாடியவரை வனத் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 4:13 AM
கைது
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:42 PM

போடி அருகே வனப் பகுதியில் முள்ளம் பன்றியை வேட்டையாடியவரை வனத் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள முத்துக்கோம்பை புலத்தில் போடி வனத் துறையினா் புதன்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி அருகேயுள்ள கரட்டுப்பட்டியைச் சோ்ந்த பெத்தமுத்து (35) அவரது தோட்டத்திலிருந்து நடந்து வந்தாா். வனத் துறையினா் அவரை நிறுத்தி, அவா் கொண்டு வந்த பையை சோதனையிட்டனா். அதில் முள்ளம் பன்றியை வேட்டையாடி அவா் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து பெத்தமுத்துவை கைது செய்து, அவரிடமிருந்து 10 கிலோ எடையுள்ள முள்ளம் பன்றியை பறிமுதல் செய்தனா்.

Advertisement