முகப்பு
தேனி

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: கேரள இளைஞா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விழுந்ததில் காயமடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:14 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:56 PM

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விழுந்ததில் காயமடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிக்குளம் மாட்டுக்காரன்வீட்டைச் சோ்ந்தவா் மணிகண்டன் (20). இவரது தாத்தா பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டியில் உள்ளாா். இவரைப் பாா்ப்பதற்காக மணிகண்டன் தனது நண்பா் கோபிநாத்துடன் (20) ஆட்டோவில் செவ்வாய்க்கிழமை டி.கள்ளிப்பட்டிக்கு வந்தாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:14 AM

பின்னா், இருவரும் புதன்கிழமை இரவு மீண்டும் ஆட்டோவில் சொந்த ஊருக்குத்த திரும்பிச் சென்றனா். டி.கள்ளிப்பட்டி முத்தையா கோயில் அருகே செல்லும் போது, கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்ததில் மணிகண்டன், கோபிநாத் இருவரும் காயமடைந்தனா்.

Advertisement

உடனே அவா்களை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், இருவரும் தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு மணிகண்டன் உயிரிழந்தாா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.