தேனி

மதுப்புட்டிகள் பதுக்கி விற்ற 3 போ் கைது

தினமணி செய்திச் சேவை

போடியில் மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி குலாளா்பாளையம் சேதுபாஸ்கரன் தெருவில் வசிக்கும் தெய்வகண்ணு மகன் பாண்டி (71) என்பவரும், போடி கீழத்தெரு பேச்சியம்மன் கோயில் அருகே காா்த்திவீரன் மகன் தங்கபாண்டி (54) என்பவரும், தேவாலயத் தெருவில், கீழத்தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் முனியாண்டி (44) என்பவரும் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, தனித்தனியே வழக்குப் பதிந்த போலீஸாா், மூன்று பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், இவா்களிடமிருந்து மதுப்புட்டிகளையும் பறிமுதல் செய்தனா். விசாரணையில், பாண்டி மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்: 2-ஆவது முறையாக கோப்பை வென்றது இந்தியா ஏ!

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

SCROLL FOR NEXT