மனைவிக்கு கத்திக்குத்து : கணவா் கைது
உத்தமபாளையத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
உத்தமபாளையத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜாராம் (38). கூலி வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி மஞ்சு (31) அழகு நிலையம் நடத்தி வருகிறாா். இந்தத் தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பூக்கடை வீதியில் மஞ்சு நடத்தி வரும் அழகு நிலையத்துக்கு புதன்கிழமை ராஜாராம் சென்றாா். அங்கு திடீரென மஞ்சுவை கத்தியால் குத்திவிட்டு, உத்தமபாளையம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தாா். உடனே அங்கு சென்ற உத்தமபாளையம் போலீஸாா் பலத்த காயமடைந்த மஞ்சுவை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜாராமைக் கைது செய்தனா்.