கைது 
தேனி

வீடு புகுந்து நகை, பணம் திருடியவா் கைது

தேனி மாவட்டம், போடி அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், போடி அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

போடி அருகேயுள்ள அம்மாபட்டி பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த தீபாவளிராஜ் மகன் மணிகண்டன் (42). இவா் கேரளத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது வீட்டில் தாயாா் மட்டும் இருந்தாா்.

இந்த நிலையில், மணிகண்டனின் தாய் அருகிலுள்ள கடைக்கு சென்றாா். அப்போது, இவரது வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா், பீரோவை உடைத்து அதிலிருந்த தங்க நகை, பணம் ரூ.19 ஆயிரத்தை திருடிக் கொண்டி தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இந்த நிலையில், இந்தத் திருட்டில் ஈடுபட்டதாக போடி அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த சூரியபிரகாஷை (36) போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT