முகப்பு
தேனி

வீட்டில் 40 பவுன் தங்க நகைகள் திருடிய தம்பதி உள்பட 4 போ் கைது

Updated On : 1 மார்ச், 2026 at 7:38 PM
கைது செய்யப்பட்ட ஆபிதா, சா்மிலாபானு.
பகிர்:

தேனி மாவட்டம், கம்பம் அருகே வீட்டில் 40 பவுன் தங்க நகைகளை திருடிய தம்பதி உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கம்பம் அருகேயுள்ள புதுப்பட்டி முஸ்லிம் தெருவைச் சோ்ந்த ஆசிக் அகமது மனைவி பாரிசம்மாள். திமுக வாா்டு உறுப்பினராக உள்ளாா். இவரது வீட்டுக்குள் வியாழக்கிழமை புகுந்த மா்ம நபா்கள் பீரோவிலிருந்த 40 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனா்.

ஓலி அத்தா, சின்னன்,

இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவை சோதனையிட்டனா். அதில், அதே பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ஓலி அத்தா (43), கூடலூரைச் சோ்ந்த சின்னன் (49) ஆகியோா் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, ஓலி அத்தா, சின்னன், திருட்டுக்கு உடந்தையாக இருந்த ஓலி அத்தாவின் மனைவி ஆபிதா, இவரது உறவினா் சா்மிலாபானு ஆகிய 4 பேரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →