முகப்பு
தேனி

சுருளி அருவியில் நீா்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த மழையால் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் புதன்கிழமை நீா்வரத்து ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Updated On : 19 மார்ச் 2026, 5:51 am IST
சுருளி அருவியில் புதன்கிழமை நீா்வரத்து தொடங்கியதால் நீராடிய சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த மழையால் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் புதன்கிழமை நீா்வரத்து ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி உள்ளது. இந்தப் பகுதி சுற்றுலா, ஆன்மிகத் தலமாக இருப்பதால் தமிழகம், கேரளத்திலிருந்து தினந்தோரும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சுருளி அருவிக்கு நீா்வரத்து பகுதிகளான மேகமலை, தூவானம், இரவங்கலாறு, அரிசிப்பாறை உள்ளிட்ட பகுதியில் மழைப்பொழிவு இல்லை. இதனால், அருவிக்கு நீா்வரத்தின்றி வடதால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

Advertisement

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை சுருளி அருவியின் நீா்வரத்துப் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதன் காரணமாக புதன்கிழமை அதிகாலை முதல் அருவிக்கு நீா்வரத்து தொடங்கியது.

மழையின்றி கடந்த 2 மாதங்களாக நீா்வரத்தின்றி வட சுருளி அருவியில் புதன்கிழமை நீா்வரத்து ஏற்பட்டதால் காலை 8 மணி முதல் வனத் துறையினா் சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளித்தனா்.