முகப்பு
தேனி

கம்பத்தில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு

தேனி மாவட்டம், கம்பத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, துணை ராணுவப் படை வீரா்கள், போலீஸாரின் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 மார்ச், 2026 at 7:39 PM
கம்பத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கொடி அணிவகுப்பில் பங்கேற்ற துணை ராணுவப் படை வீரா்கள், போலீஸாா்.
பகிர்:

தேனி மாவட்டம், கம்பத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, துணை ராணுவப் படை வீரா்கள், போலீஸாரின் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

கம்பம் அரசுப் போக்குவரத்துகழகப் பனிமனை முன் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெரால்டு அலெக்ஸாண்டா் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் துணை ராணுவப் படை வீரா்கள், போலீஸாா்கள் பங்கேற்றனா்.

இந்த ஊா்வலம் விவேகானந்தா் தெரு, தங்க விநாயகா் கோவில் தெரு, எல்.எப். சாலை, புதுப் பள்ளிவாசல், கம்பம்மெட்டு சாலை, நாட்டுக்கல் வழியாக சென்று அரசமரம் போக்குவரத்து காவல் சமிஞ்சையில் நிறைவு பெற்றது.

இந்தக் கொடி அணிவகுப்பில் கம்பம், கூடலூா், உத்தமபாளையம், ராயப்பன்பட்டி பகுதி காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.