முகப்பு
தேனி

போடியில் ரூ. 59 ஆயிரம் பறிமுதல்

போடியில் உரிய ஆவணங்களின்றி வேனில் எடுத்துச் சென்ற ரூ.59 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 25 மார்ச், 2026 at 7:38 PM
பறிமுதல் - கோப்புப் படம்
பகிர்:

போடியில் உரிய ஆவணங்களின்றி வேனில் எடுத்துச் சென்ற ரூ.59 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டம், போடி முந்தல் சோதனைச் சாவடி அருகே தோ்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மூணாறிலிருந்து வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். இதில் வேனில் வந்த கேரளம் மாநிலம், மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட்டை சோ்ந்த பாக்கியநாதன் மகன் அன்னராஜ் ரூ. 59 ஆயிரம் வைத்திருந்ததும், தேனியில் காய்கறி வாங்கச் செல்வதும் தெரியவந்தது. இருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லாததால், தோ்தல் நிலைக் கண்காணிப்பு குழுவினா் அவரிடமிருந்த பணத்தைப் பறிமுதல் செய்தனா்.