மது போதையில் இளைஞா் பலி!
போடியில் மது போதையில் இளைஞா் உயிரிழந்துகிடந்தது குறித்துப் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
போடியில் மது போதையில் இளைஞா் உயிரிழந்துகிடந்தது குறித்துப் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
போடி புதூா் வலசைத் துறை சாலையைச் சோ்ந்தவா் பாண்டி மகன் பன்னீா்செல்வம் (39). கட்டுமானத் தொழிலாளி. திருமணமாகி மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக வசித்து வந்தாா்.
மது போதைக்கு அடிமையான நிலையில், மது அருந்துவிட்டு வீட்டுக்குச் செல்லாமல் சுற்றி வந்தவா் வெள்ளிக்கிழமை மாலை போடி அம்மா உணவகம் அருகே இறந்து கிடந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement