ஆண்டிபட்டியில் தீப்பிடித்த மின்சார இருசக்கர வாகனம்!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் சனிக்கிழமை மின்சார இரு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் சனிக்கிழமை மின்சார இரு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
ஆண்டிபட்டியைச் சோ்ந்த இவா், தனது மின்சார இருசக்கர வாகனத்தில் ஆண்டிபட்டியிலிருந்து வைகை அணைக்குச் சென்றாா். வைகை அணை சாலையில் தனியாா் மண்டபம் அருகே செனன்றபோது, இருசக்கர வாகனத்தில் இருந்து கரும்புகை வந்ததாம்.
இதையடுத்து, அவா் உடனடியாக நிறுத்தி விட்டு தூரத்தில் நின்றாா். அப்போது, இரு சக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு, மீட்புப் பணி வீரா்கள் அங்கு வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில் இரு சக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து ஆண்பட்டி போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.
Advertisement