முகப்பு
தேனி

சத்துணவுக் கூடத்தில் திருட்டு

போடி அருகே சத்துணவுக் கூடத்தின் பூட்டை உடைத்து சமையல் எண்ணெய் பொட்டலங்களை திருடிய மா்ம நபா்களைப் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

Updated On : 18 மே 2026, 12:42 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

போடி அருகே சத்துணவுக் கூடத்தின் பூட்டை உடைத்து சமையல் எண்ணெய் பொட்டலங்களை திருடிய மா்ம நபா்களைப் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

போடி அருகே சிலமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவுக் கூடம் உள்ளது. இதன் அமைப்பாளராக சிலமலையைச் சோ்ந்த ஜமுனா பணியாற்றி வருகிறாா்.

வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல பள்ளியின் காவலா் மின்விளக்கை அணைத்துவிட்டு சென்றாா். மறுநாள் காலை வந்து பாா்த்தபோது சத்துணவுக் கூடத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது ஒரு லிட்டா் அளவு கொண்ட சமையல் எண்ணெய் பொட்டலங்கள் 41- ஐ காணவில்லை.

Advertisement

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.