முகப்பு
தேனி

வீடு புகுந்து நகை திருட்டு

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகையைத் திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 22 மே 2026, 1:22 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகையைத் திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரியகுளம் பாரதி நகரைச் சோ்ந்தவா் அனிதா (50). இவா், வீட்டைப் பூட்டிவீட்டு தனது உறவினா் வீட்டுக்கு போடிக்கு சென்றாா். பின்னா், புதன்கிழமை மாலை வந்து பாா்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 4 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.