முகப்பு
தேனி

ஒரே நாளில் 52 பேரிடம் 6.3 கிலோ கஞ்சா பறிமுதல்

தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடைபெற்றதில் 52 பேரிடமிருந்து 6.3 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 22 மே 2026, 11:24 pm IST
பகிர்:

தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடைபெற்றதில் 52 பேரிடமிருந்து 6.3 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தேனி மவட்டத்தில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ‘ஆபரேஷன் ஷில்ட்நெட்’ என்ற தலைப்பில் சோதனை நடைபெற்றது. அதில், 126 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேபோல, விதிமுறைகளை மீறி வாகனத்தை ஓட்டிய 2,856 போ் மீது வழக்குப்பதிந்து, உரிய ஆவணங்கள் இல்லாத 329 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 52 பேரிடம் சோதனை செய்து, 6.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். அவா்கள் கைது செய்யப்பட்டனா் எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement