மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல்: கணவா் மீது வழக்கு
தேவாரத்தில் மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தேவாரத்தில் மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தேவாரம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காளீஸ்வரி (26). இவருக்கும், போடி அருகே சிலமலை கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் (38) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி சிலமலையில் வசித்து வந்தனா்.
கண்ணன் மது போதையில் துன்புறுத்தியதால் அவரை விட்டுப் பிரிந்த காளீஸ்வரி தேவாரத்தில் பெற்றோருடன் வசித்து வந்தாா். அங்கு சென்ற கண்ணன், காளீஸ்வரியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்து புகாரின்பேரில் போலீஸாா் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement