முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா வித்யாலயாவிற்கு சி.பி.எஸ்.இ. அங்கீகாரம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்-பிள்ளையார்குளத்தில் உள்ள சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா வித்யாலயாவிற்கு சி.பி.எஸ்.இ. அங்கீகாரம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்-பிள்ளையார்குளத்தில் உள்ள சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:48 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்-பிள்ளையார்குளத்தில் உள்ள சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பள்ளிக்கு மத்திய அரசு வழங்கியதற்கும், மாநில அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியதற்கும் பள்ளி நிர்வாகம் சார்பில் அரசிற்கும், அதிகாரிகளுக்கும் விழாவில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் செவ்வாய்கிழமை பள்ளியில் இது விழாவாக தாளாளர் சி.குமரேசன் தலைமையில் கொண்டாடப்பட்டு மாணவ மாணவியருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொழிலதிபர் டைகர் கே.சம்சுதீன், பள்ளி ஆலோசகர் எஸ்.பாரதி, முதல்வர் பி.முருகதாசன், துணை முதல்வர் எஸ்.சத்தியமூர்த்தி மற்றும் ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய பெற்றோர் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.எஸ்.இ. பள்ளி இல்லாத நிலையில் பெற்றோர் மற்றும் மாணவர்களின் குறையைப் போக்க இந்தப் பள்ளி உள்ளது என்று தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஒருங்கிணைப்பாளர் அமுதா தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →