யானைகள் அட்டகாசம்
ராஜபாளையம் அருகேயுள்ள தென்னந்தோப்பில் வெள்ளிக்கிழமை இரவு யானைகள் புகுந்து தென்னை மரங்களைச் சேதப்படுத்திச்
ராஜபாளையம் அருகேயுள்ள தென்னந்தோப்பில் வெள்ளிக்கிழமை இரவு யானைகள் புகுந்து தென்னை மரங்களைச் சேதப்படுத்திச் சென்றன.
ராஜபாளையம் அருகேயுள்ள செல்லம்பிள்ளை ஊருணிப் பகுதியில் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான தோப்பு உள்ளது.
இங்கு வெள்ளிக்கிழமை இரவு வனத்திலிருந்து யானைகள் வந்து தோப்புக்குள் புகுந்து தென்னங்கன்றுகளை ஒடித்து குருத்துகளை தின்றுச் சென்றது.
பாதிக்கப்பட்ட ராமச்சந்திரன் வனத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். வனத்துறையினர் சேதமடைந்த தென்னந்தோப்பை சனிக்கிழமை பார்வையிட்டனர்.