விருதுநகர்

ஏ.முக்குளம் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

 காரியாபட்டி அருகேயுள்ள ஏ.முக்குளம் சாலை படுமோசமாக இருப்பதால், வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. அதனை இருவழிச் சாலையாக மாற்ற, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கல்யாணி வெங்கடராமன்

 காரியாபட்டி அருகேயுள்ள ஏ.முக்குளம் சாலை படுமோசமாக இருப்பதால், வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. அதனை இருவழிச் சாலையாக மாற்ற, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

   காரியாபட்டியிலிருந்து ஏ.முக்குளம் 28 கி.மீ., தூரத்தில் உள்ளது. இந்த வழித்தடத்தில் மீனாட்சிபுரம், முஷ்டக்குறிச்சி, தேசியனேந்தல், சீகனேந்தல், ஆலங்குளம், பனைக்குடி, புல்வாய்க்கரை என பல ஊர்கள் உள்ளன. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், நாலூர் வழியாக மானாமதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு, எளிதில் செல்லும் வழியாக இது உள்ளது.

   இப்பகுதியில் மூலிகை பண்ணை இருப்பதால், அடிக்கடி வாகனப் போக்குவரத்தும் உள்ளது. அரசு, தனியார் பஸ்களும் சென்று வருகின்றன. இந்த ரோடு போடப்பட்டு 8 ஆண்டுகள் ஆகின்றன. இதனால், தற்போது ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. பல்வேறு கோரிக்கைக்கு பின், ரோட்டில் ஒட்டு போடும் பணிகள் நடந்தன. இதுவும் முறையாக போடாமல், மேலும் பள்ளங்கள் உருவாகி, படுமோசமாக காட்சியளிக்கிறது. வாகனங்கள் சென்று வருவதிலும் சிரமம் ஏற்படுகிறது.

   விவசாய நேரத்தில் விதைகள், உரங்கள் கொண்டு செலவதில் சிக்கல் நீடிக்கிறது. பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்றவாறு, ரோட்டை சீரமைத்து, இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT