உழவன் நண்பன் ஆய்வுக் கூட்டம்
விருதுநகர் மாவட்டம் ம. ரெட்டியபட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள கூட்டரங்கில் உழவன் நண்பன் ஆய்வுக்கூட்டம் வேளாண் உதவி இயக்குனர் நாச்சியார் அம்மாள் முன்னிலையில் நடைபெற்றது. அட்மா திட்ட வேளாண் அலுவலர் சுந்தரவள்ளி தொழில் நுட்ப உரையாற்றினார். விவசாயிகள், வேளாண்
விருதுநகர் மாவட்டம் ம. ரெட்டியபட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள கூட்டரங்கில் உழவன் நண்பன் ஆய்வுக்கூட்டம் வேளாண் உதவி இயக்குனர் நாச்சியார் அம்மாள் முன்னிலையில் நடைபெற்றது.
அட்மா திட்ட வேளாண் அலுவலர் சுந்தரவள்ளி தொழில் நுட்ப உரையாற்றினார். விவசாயிகள், வேளாண் அலுவலர்கள் கூறும் தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் கூடுதல் மகசூல் பெறலாம் எனவும், அதற்கு சிறந்த விவசாயிகளுக்கான பரிசு அரசால் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பயிர் விதைப்பதற்கு முன்பும் மண்ணை பரிசோதித்து தேவையான உரம் இடுவதால் கூடுதல் மகசூல் பெற முடியும் என தெரிவித்தார். கூட்டத்தில் ஞானப்பிரகாஷ், பாக்கியராஜ், சோலைராஜ் ஆகியோர் தொழில் நுட்ப அனுபவங்களை கூறினர். அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் பிரேமா நன்றி கூறினார்.