விருதுநகர்

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

இப் பேரணியை விருதுநகர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் வசந்தராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவியர்கள் திருச்சுழியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று பூமிநாதர் கோவில் வரை வாக்காளர் சேர்க்கை வாசகங்களை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலத்தில் வட்டாட்சியர் ரெங்கநாதன், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் ஷாஜஹான், மண்டல துணை வட்டாட்சியர் பாண்டிசங்கர் ராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வல முடிவுற்ற பின்னர் வாக்குசாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தத்தின்போது பொதுமக்களிடமிருந்து படிவங்கள் பெறுவதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT