விருதுநகர்

துவரை சாகுபடியில் மகசூல் அதிகரிப்பு வேளாண் அதிகாரிகள் ஆலோசனை

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி திருச்சுழி பகுதியில் மானாவாரியில் நடவுமுறை தொழில்நுட்பத்தினை பயன்படுத்தினால் துவரையில் மகசூலை அதிகரிக்கலாம் என வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி திருச்சுழி பகுதியில் மானாவாரியில் நடவுமுறை தொழில்நுட்பத்தினை பயன்படுத்தினால் துவரையில் மகசூலை அதிகரிக்கலாம் என வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் உளுந்து, பாசி பயறு, துவரை ஆகியவை மிகமுக்கியமான பயிர்களாகும். அதிலும், துவரை தென் மாநிலங்களில் ஒரு முக்கிய பயிராகும். மானாவாரியில் நடவுமுறை துவரை சாகுபடி தொழில்நுட்பத்தினை பயன்படுத்தினால் துவரையில் மகசூலை அதிகரிக்கலாம். ஒரு ஹெக்டேருக்கு தேவையான துவரை நாற்றுகளை தயார் செய்வதற்கு 2.5 கிலோ விதை போதுமானது. எம்.ரெட்டியபட்டியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் சி.ஓ. (ஆர்.ஜி) 7 துவரை விதைகள் மானிய விலையில் கிடைக்கும். மானாவாரியில் சரியான நேரத்தில் மழை பொய்த்துவிட்டாலும், மழை வந்தபின் நாற்றுகளை நடவு செய்யலாம். கடினப்படுத்தப்பட்ட விதை நாற்றின் துரிதவேர் வளர்ச்சி மற்றும் வறட்சியை தாங்க வழிவகை செய்கிறது. பக்க கிளைகள் மற்றும் தாவர வளர்ச்சி நன்றாக உள்ளதால் காய் மற்றும் விதை பிடிப்புதிறன் அதிகமாக மகசூலை அதிகரிக்கலாம். மேலும், எம்.ரெட்டியபட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் துவரை நடவு பற்றிய தொழில்நுட்ப விவரங்களை பெற 04566 284585 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT