முகப்பு
விருதுநகர்

டிராக்டருடன் கிணற்றுக்குள் விழுந்தவர் மீட்பு

திருச்சுழி அருகே டிராக்டருடன் கிணற்றுக்குள் விழுந்தவர் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டார்.விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள ரெங்கையன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜகண்ணு. இவரிடம் டிராக்டர்

Updated On : 2 ஏப்ரல், 2015 at 12:29 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 9:42 AM

திருச்சுழி அருகே டிராக்டருடன் கிணற்றுக்குள் விழுந்தவர் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள ரெங்கையன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜகண்ணு. இவரிடம் டிராக்டர் ஓட்டுநராக கத்தாளம்பட்டி ராஜேந்திரன் (வயது 45) பணியாற்றி வருகிறார். சேதுபுரம் கிராமத்தை சேர்ந்த தொந்தியனின் செவ்வாய்க்கிழமை நிலத்தை டிராக்டரில் உழும் பணியில் ராஜேந்திரன் ஈடுபட்டிருந்தார்.

அப்போது நிலை தடுமாறி டிராக்டர் அங்கிருந்த கிணற்றுக்குள் கவிழ்ந்தது.

Advertisement

இதையடுத்து ராஜேந்திரன் கிணற்றுக்குள் 3 மணி நேரம் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார். அப்போது இவருக்கு உணவு கொடுக்க வந்த ரெங்கையன்பட்டியைச் சேர்ந்த பெருமாள்ராஜா பார்த்து மற்றவர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ராஜேந்திரன் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டார். டிராக்டரும் மீட்கப்பட்டது. படுகாயமடைந்த ராஜேந்திரனுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருச்சுழி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.