மல்லாங்கிணறில் ஏப். 3}இல் சென்னகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு சென்னகேசவ பெருமாள் கோயில் பங்குனி தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை அன்னவாகனத்தில் பெருமாள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு சென்னகேசவ பெருமாள் கோயில் பங்குனி தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை அன்னவாகனத்தில் பெருமாள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மல்லாங்கிணறு செங்கமலநாச்சியார் சமேத சென்னகேசவ பெருமாள் கோயில் பங்குனி உத்திர தேரோட்ட திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொட்ங்கியது. இரவு முதல் மண்டகப்படியை முன்னிட்டு சென்னகேசவ பெருமாள் அன்னவாகனத்தில் மோகினி அவதாரத்தில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் சிம்மவாகனம், கருடவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பல அவதாரங்களில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஏப்ரல் 3ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஸ்ரீதேவி, பூதேவியுடன் சென்னகேசவபெருமாள் ரதம் ஏறி நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். சனிக்கிழமை பூப்பல்லக்கில் உத்திர தேரோட்ட திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.