விருதுநகர்

ரயில் போக்குவரத்து குறித்து ராஜபாளையம் பள்ளி மாணவர்களுக்கு  விளக்கம்

DIN

ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக, ராஜபாளையம் சத்யா வித்யாலயா பள்ளி 5 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களுடன் வியாழக்கிழமை அங்கு சென்றனர்.
         பள்ளித் தாளாளர்  செ. குமரேசன், பள்ளி மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் சித்ரா குமரேசன், பள்ளி நிர்வாக அதிகாரி  அரவிந்த் ஆகியோர் தலைமையில், பள்ளித் தலைமை ஆசிரியை கலாதேவி முன்னிலையில், ஆசிரியைகள் ஜெஸ்ஸிரத்தினமேரிரூபவ் , சுமதி ஆகியோரும் சென்றனர்.
    ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே காவல்துறை அதிகாரி  மாரியப்பன், முருகப்பாண்டியன், சேது ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ரயிலில் மாணவர்கள் எவ்வாறு பயணம் செய்யவேண்டும், பொது சொத்தை  எங்ஙனம் பாதுகாப்பது மற்றும் ரயில்வே போக்குவரத்து குறித்து அனைத்து விளக்கங்களையும்  எடுத்துக்கூறினர். மேலும்,  மாணவர்களின் சந்தேகங்களுக்கும் பதிலளித்தனர். பின்னர், மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT