விருதுநகர்

விருதுநகர் மீன் சந்தையில் தீவிபத்து: 40 கடைகள் சேதம்

DIN

விருதுநகர் மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை இரவு  ஏற்பட்ட தீவிபத்தில் 40 கடைகளில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.
 விருதுநகர் தேசபந்து மைதானம் அருகே செயல்படும் நகராட்சி மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் 5 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  தீவிபத்தில் 40 கடைகள் சேதமடைந்தன. மேலும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமாயின. மின்கசிவு காரணமாக இத்தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால் உயிர் சேதம் இல்லை. சம்பவ இடத்தை டிஎஸ்பி லட்சுமணன் பார்வையிட்டார்.
 இந்த தீவிபத்து குறித்து விருதுநகர் மேற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT