சிவகாசி வட்டம் தேவர்குளம் ஊராட்சியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சிவகாசியைச் சுற்றி பல இடங்களில் பல குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்றுதான் தேவர்குளம் ஊராட்சியில் உருவாகியுள்ள மின்வாரிய குடியிருப்பு. இங்கு சுமார் 250 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள சாலைகள் சீரமைக்கப்படாமல் மேடுபள்ளங்களாக உள்ளன. மழைகாலங்களில் சாலையில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். போதிய கழிவு நீர் வாய்கால் அமைக்கப்படாததால் சுகாதாரகேடு பரவி வருகிறது.மின் விளக்குகள் பல அமைக்கப்படிருந்தாலும், பல மின்கம்பங்களில் விளக்கு பழுதாகியுள்ளது. எனவே இப்பகுதிக்கு மேல்நிலைத் தொட்டி அமைத்து தண்ணீர் வசதி செய்து செய்து கொடுக்க வேண்டும், கழிவுநீர் கால்வாய்கள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.