விருதுநகர்

சென்னையில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம்

DIN

சென்னை கொடுங்கையூரில் நிகழ்ந்த  தீ விபத்தில் உயிரிழந்த விருதுநகர் தீயணைப்பு வீரரின் உடல் சொந்த ஊரில் போலீஸ் மரியாதையுடன் ஞாயிற்றுகிழமை இரவு அடக்கம் செய்யப்பட்டது.
 விருதுநகர் அருகே தடங்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஏகராஜ் (55).   விருதுநகர் தீயணைப்பு துறையில் பணியாற்றி வந்த இவர்,  மாற்றுப் பணியாக சென்னையில் பணியாற்றி வந்தார். சென்னை, கொடுங்கையூரில் ஞாயிற்றுக்கிழமை பேக்கரி ஒன்றில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டபோது எரிவாயு உருளை வெடித்து சிதறியதில் ஏகராஜ் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல், சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் தடங்கம் கிராமத்திற்கு ஞாயிற்றுகிழமை இரவு 10.30 மணிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில், தீயணைப்புத் துறை தென்மண்டல துணை இயக்குநர் சரவணக்குமார், திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாண்டியன்,  விருதுநகர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT