விருதுநகர்

மணல் திருட்டு: இருவர் கைது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு இடத்தில் டிராக்டரில் மணல் திருடிய இருவரை போலீஸார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
நத்தம்பட்டி காவல் சார்பு ஆய்வாளர் ஏ.அமுதா மற்றும் போலீஸார் மணல் திருட்டு தொடர்பாக சனிக்கிழமை அழகாபுரி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு உரிய அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்த பேரையூர் தாலுகா, ஜாரி உசிலம்பட்டியைச் சேர்ந்த வெ.மாரிச்சாமி (25), ஏ.பாறைப்பட்டி கு.சுப்புராஜ் (54) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். மேலும் மு.கிருஷ்ணமூர்த்தி என்பவரைத் தேடி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT