அரசு விலையில் மணல் விற்பனை: லாரி உரிமையாளர்கள் கோரிக்கை
விருதுநகரில் சிறு கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விருதுநகரில் சிறு கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. பின்னர், செயலர் செந்தில்குமார் கூறுகையில், விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அரசு அனுமதியின்றி தனியார் சார்பில் மணல் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு, கூடுதல் விலைக்கு மணல் விற்பனை செய்கின்றனர். இதைத் தடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் அரசு சார்பில் மணல் குவாரி அமைத்து, அரசு அறிவித்த கட்டணத்தில் மணல் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
இதில், சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.