முகப்பு
விருதுநகர்

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒருவர் சாவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 6:47 AM
பகிர்:

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
 சிவகாசி அருகே உள்ள எதிர்கோட்டையில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. இதில், கணபதி, தெய்வானை ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 4 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில், சுப்பிரமணி, மாரிமுத்து ஆகிய இருவர் சனிக்கிழமை உயிரிழந்தனர். 
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கண்ணார்பட்டியைச் சேர்ந்த இருளப்பன் மகன் பரமசிவம் (19) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 
இதன்மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த விஜயலட்சுமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.