செங்கோட்டை - கோவை கோடைகால சிறப்பு ரயில் நேரம் மாற்றம்
செங்கோட்டை - கோவை இடையே இயக்கப்படும் கோடைகால சிறப்பு ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செங்கோட்டை - கோவை இடையே இயக்கப்படும் கோடைகால சிறப்பு ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
புதிய நேரப்படி திங்கள்கிழமைகளில் வண்டி எண்- 06021 கோவை - செங்கோட்டை சிறப்பு ரயில் ஏப். 9, 16, 23, 30, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25 ஜூலை 2 ஆகிய தேதிகளில் கோவையில் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு செங்கோட்டை சென்றடைகிறது.
இதேபோல், செவ்வாய்க்கிழமைகளில் வண்டி எண்- 06022, செங்கோட்டை - கோவை சிறப்பு ரயில் ஏப். 10, 17, 24, மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26, ஜூலை 3 ஆகிய தேதிகளில் செங்கோட்டையிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ரயில், பயணிகள் நலன் கருதி, செங்கோட்டையில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு, கோவைக்கு மறுநாள் காலை 5.45 மணிக்கு சென்றடைகிறது.
இந்த சிறப்பு ரயில் பொள்ளாச்சி சந்திப்பு, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ஊர்களில் நின்று செல்லும்.
இதில், 3 -ஆம் வகுப்பு ஏசி, தூங்கும் வசதியுள்ள இரண்டாம் வகுப்புக்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. சிறப்பு ரயிலின் நேர மாற்றம் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ரயிலை தினசரி விரைவு ரயிலாக அறிவிக்க பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.