உரிய அனுமதியின்றி அமமுகவினர் விளம்பர பதாகை வைத்திருந்ததாக திங்கள்கிழமை அந்த அமைப்பின் நிர்வாகிகள் இருவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே , அம்மா மக்கள் முனேற்ற கழகம் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அனுமதியின்றி இரு விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்ததாம். இது குறித்தப் புகாரின்பேரில் எம்.புதுப்பட்டி போலீஸார் அந்த அமைப்பின் நிர்வாகிகளான செல்லம் மற்றும் லிங்கசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.