விருதுநகர்

வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு

DIN

திருத்தங்கலில் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருடப்பட்டுள்ளதாக போலீஸில் திங்கள்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது.
    திருத்தங்கல் பாண்டியன்நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் கதிரேசன்(34). இவர் தச்சுப்பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார்.  இவர் கடந்த 
14-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் ராஜபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிக்கு சென்றுள்ளார். திங்கள்கிழமை காலை அவரது வீட்டின் கதவு திறந்திருப்பதை பார்த்த அவரது உறவினர் பாக்கியலட்சுமி, கதிரேசனுக்கு தகவல் கொடுத்துள்ளார். 
தொடந்து ராஜபாளையத்திருந்து கதிரேசன் திரும்பிவந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவை உடைத்து அதில் இருந்த மோதிரம், சங்கிலி உள்ளிட்ட ஆறரை பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 5 ஆயிரம் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT