விருதுநகர்

அருப்புக்கோட்டையில் அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் வலியுறுத்தல்

DIN

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகரில் அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அருப்புக்கோட்டை 9 ஆவது வார்டுக்குள்பட்ட எம்.டி.ஆர். நகரில் சுமார் 2 ஆயிரக் ம் பேர் வசிக்கின்றனர். ஆனால், இப்பகுதியில் முறையான வாருகால் வசதி இல்லாததால், கழிவுநீர் வீதிகளில் வழிந்தோடுகிறது. மேலும், போதிய தெரு விளக்குகள் இல்லை. இதனால், இரவில் பெண்கள் நடமாட அச்சப்படுகின்றனர். அதேபோல், சாலை வசதியும் இல்லாததால், இப்பகுதியினர் மிகவும் சிரமப்படுகின்றனர்.      
அடிப்படை வசதிகள் கோரி நகராட்சி நிர்வாகத்தில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இப்பகுதியில் அடிப்படை வசதிகளை விரைவில் ஏற்படுத்தித் தர நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT