அருப்புக்கோட்டையில் ஸ்ரீஜெகந்நாதர் தேர் பவனி
அருப்புக்கோட்டையில் இஸ்கான் அமைப்பினர் சார்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் ஜெகந்நாதர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அருப்புக்கோட்டையில் இஸ்கான் அமைப்பினர் சார்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் ஜெகந்நாதர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அருப்புக்கோட்டை ஸ்ரீஆயிரங்கண் மாரியம்மன் கோயில் வளாகம் முன் தொடங்கிய இத்தேரோட்ட நிகழ்ச்சிக்கு இஸ்கான் அமைப்பின் குருஜி ஜெயபதாக ஸ்வாமி தலைமை வகித்தார்.தேரோட்ட நிகழ்ச்சியின் தொடக்கமாக பக்தி ஆஸ்ரேய வைஷ்ணவா, சுக தேவா, பக்தி வினோத் ஸ்வாமி, பானு ஸ்வாமி ஆகியோரின் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தொழிலதிபர் டி.ஆர்.தினகரன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தார்.
விருதுநகர் சாலை, பெரிய கடை வீதி, ஸ்ரீஅமுதலிங்கேஸ்பரர் கோயில் பகுதி, திருச்சுழி சாலை, வடக்கு ரத வீதி வழியாகச் சென்று தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் முன் தேரோட்டம் நிறைவடைந்தது. பின்னர் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட மேடையில் சிறப்பு சங்கீர்த்தனமும், குசேலர் எனும் ஆன்மிக நாடகமும், ஜெகந்நாதர் லீலை பற்றிய ஆன்மிகச் சொற்பொழிவும் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை இஸ்கான் கிளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.