வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!
17 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிய பஞ்சாப் கிங்ஸ்
Updated On : 16 ஏப்ரல், 2026 at 10:58 PM
மும்பை : மும்பையின் வான்கடே கிரிக்கெட் திடலில் இன்று(ஏப். 16) நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ். 196 ரன்கள் இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியில், அதிகபட்சமாக ப்ரப்சிம்ரன் சிங் 39 பந்துகளில் 80 ரன்களும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் 66 ரன்களும் திரட்டி வெற்றிக்கு வித்திட்டனர்.
summary