முகப்பு
விருதுநகர்

திருத்தங்கலில் தீக்குளித்து காயமடைந்த பெண் சாவு

திருத்தங்கலில் குடும்பத் தகராறில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 9 ஜூலை, 2018 at 6:54 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

திருத்தங்கலில் குடும்பத் தகராறில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
திருத்தங்கல் அக்ரஹார தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி பேச்சியம்மாள் (34). இத்தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம். 
இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் மன வருத்தம் அடைந்த பேச்சியம்மாள் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தன் உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். இதில் காயமடைந்த பேச்சியம்மாள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இது குறித்தப் புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.