விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாலத்தை செப்பனிட கோரிக்கை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ள கழிவு நீர் பாலங்களை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், அத்திகுளம் தெய்வேந்திரி ஊராட்சிக்குட்பட்ட குருசாமிபுரம் கிராமத்தில்,  பிரதான தெருவின் முகப்பில் உள்ள கழிவு நீர் பாலமும், வடக்கு தெருவின்  முகப்பில் உள்ள  கழிநீர் பாலமும் பழுதாகி   இரண்டு ஆண்டுகளாகி விட்டது. 
  இதனால் குருசாமிபுரம் ஊருக்குள் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.   இப்பகுதியில் புதிதாக உருவாகிவரும் கட்டடங்களுக்கு  தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல டிராக்டர் போய் வர முடியாத சூழல் நிலவுகிறது.  எனவே  ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் போர் கால அடிப்படையில் கழிவு நீர் பாலங்களை செப்பனிட   நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT