ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண் மீது தாக்குதல்: ஒருவர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்விரோதத்தில் பெண்ணைத் தாக்கியவர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்விரோதத்தில் பெண்ணைத் தாக்கியவர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மம்சாபுரம், அமச்சியார்பட்டியைச் சேர்ந்தவர் கா.வேலு (51). இவரது மனைவி வே.லட்சுமி (45). இவர்களுக்கும் அருகே குடியிருக்கும் ல.கோவிந்தராஜ் என்பவருக்கும் பொதுச் சுவர் தொடர்பான பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் வீட்டின் வெளியே மகன் ஆனந்தராஜூடன் நின்று லட்சுமி பேசிக் கொண்டிருந்துள்ளார். அங்கு வந்த கோவிந்தராஜ், இருவரையும் ஆபாசமாகப் பேசி, கம்பால் லட்சுமியை அடித்துக் காயப்படுத்தியுள்ளார். இது குறித்து மம்சாபுரம் காவல் நிலையத்தில் வேலு புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.