விருதுநகர்

விருதுநகரில் தொலைத் தொடர்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

தொலைபேசி ஆபரேட்டர் இடமாறுதல் தொடர்பாக, விருதுநகர் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு அலுவலகப் பணியாளர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
      விருதுநகர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன், சேவை சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜகுரு, தேசிய தொழிற்சங்க மாவட்டத் தலைவர் ராம்சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
    இதில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தொலைபேசி ஆபரேட்டர்களாக பணிபுரிபவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாறுதல் வழங்கப்படும். ஆனால் தற்போது, 3 ஆண்டுகளுக்குப் பின்னரே இடமாறுதல் வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை ரத்து செய்து, பழைய முறையை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT