விருதுநகர்

பாலத்தில் தடுப்புச் சுவர் அமைக்கக் கோரிக்கை

DIN

சாத்தூர் அருகே நடுவபட்டி நான்குவழிச் சாலையில் உள்ள பாலத்தில் தடுப்புச் சுவர் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர்-விருதுநகர் நான்குவழிச் சாலையில் நடுவபட்டி கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் இரு சக்கர வாகனங்களின் போக்குவரத்துக்காக சிறிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பாலத்தில் தடுப்புச் சுவர் கட்டப்படாததால்,  நான்குவழிச் சாலையில் செல்லும் வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.    
எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் பாலத்தில் தடுப்புச் சுவர் அமைத்து, எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT