விருதுநகர்

வருமான வரி விழிப்புணர்வு கூட்டம்

DIN

விருதுநகரில், வருமான வரி பிடித்தம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில்,  வருமான வரி செலுத்துவது தொடர்பான வியாபாரிகளின் சந்தேகங்களுக்கு மதுரை வருமான வரித்துறை இணை ஆணையர் பென் மேத்யூ வர்கீ தலைமையிலான அலுவலர்கள் பதிலளித்தனர். 
விருதுநகர் வியாபார தொழில் துறை சங்கத்தின் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் விவிஎஸ் யோகன் தலமை வகித்தார். இதில், மதுரை வருமான வரித்துறை (வரி பிடித்தம்) இணை ஆணையர் பென் மேத்யூ வர்கீ, உதவி ஆணையர் கே.ஆர். சதீஷ்பாபு, வருமான வரி ஆய்வாளர் வெங்கிட கிரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வருமான வரி செலுத்துவது குறித்த வியாபாரிகளின் சந்தேகங்களுக்கு அலுவலர்கள் விளக்கமளித்தனர். கூட்டத்தில், வியாபார தொழில் துறை சங்க செயலாளர் முத்து உள்பட ஏராளமான வியாபாரிகள், ஆடிட்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆடிட்டர் முருகதாஸ் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT