விருதுநகர்

பைக் மீது டிராக்டர் மோதல் சிறுமி சாவு

DIN


சிவகாசி அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்தில் சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
சிவகாசி அருகே உள்ள வடபட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகள் மகாலட்சுமி (3). இவரது தாத்தா வேல்சாமி மற்றும் பாட்டி சுப்புலட்சுமி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் மகாலட்சுமியை அழைத்துச் சென்றனர்.
அப்போது, எதிரே வந்த டிராக்டர் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், மூவரும் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மகாலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். வேல்சாமி, சுப்புலட்சுமியும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய டிராக்டர் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த இரண்டே வாரத்தில் தென்மேற்கு பருவமழை..!

கங்கனாவின் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

சென்னையில் வெப்பத்தை தணித்த மழை..!

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

கேஜரிவாலுக்கு சிறப்பு சலுகை: உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த அமித் ஷா

SCROLL FOR NEXT