விருதுநகர்

சாத்தூர் அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த 5 பேர் கைது

DIN

விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்ததாக 5 பேரை வெம்பக்கோட்டை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
சாத்தூர் அருகே தாயில்பட்டியை அடுத்துள்ள கலைஞர் காலனி பகுதியில் உள்ள வீடுகளில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகள் தயாரித்து வைக்கபட்டிருப்பதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இத் தகவலின் பேரில் வெம்பக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துசெல்வி உள்ளிட்ட போலீஸார் அப் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.
இதில் அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி(34), வைரமுத்து(34), முனீஸ்வரன்(51), பாஸ்கரன்(55) ஆகியோர் வீடுகளில் தலா 10 கிலோ வெடிகளும், இதே பகுதியைச் சேர்ந்த ஸ்டான்லி(35) என்பவர் வீட்டில் 16 பண்டல்கள் பட்டாசுகளையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். 
இது குறித்து கருப்பசாமி, வைரமுத்து, முனீஸ்வரன், பாஸ்கரன், ஸ்டான்லி ஆகியோர் மீது வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT