குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க ரூ.404 கோடியில் புதிய திட்டம்
அருப்புக்கோட்டைக்கு வந்த அதிமுக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணியில் சுமார் 1200 தொண்டர்கள் பங்கேற்றனர்.
அருப்புக்கோட்டைக்கு வந்த அதிமுக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணியில் சுமார் 1200 தொண்டர்கள் பங்கேற்றனர். அருப்புக்கோட்டை நேரு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள்
ஆர்.பி.உதயக்குமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர், 111 பயனாளிகளுக்கு ரூ.61.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர். விழா முடிவில், அருப்புக்கோட்டையில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி "ரூ.404 கோடியில் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய ஊர்களை இணைத்து சிறப்புக் குடிநீர்த் திட்டம் தயாராகி வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில், எம்.பி., டி.ராதாகிருஷ்ணன், அருப்புக்கோட்டை அதிமுக நகரச் செயலாளர் கண்ணன், ஒன்றியச் செயலாளர் போடம்பட்டி சங்கரலிங்கம், முன்னாள் தொகுதிச் செயலாளர் முத்துராஜா, அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.